Thursday, February 18, 2016

விரிக்கும் கரங்களில்
நீர்
குவிக்கும் மலர்களில்
தேடித்தேடி
முட்களைச் சேர்த்து
என்
தலையில் கவிழ்க்கிறேன்.

இலையோ சருகோ
குருத்தோ
எதுவென்ற போதும்
குறுக்கே பொருத்தி
சிலுவை அமைக்கிறேன்

வரமென வந்தவற்றின்
குறைகளை
ஆய்ந்தே
வாழ்க்கை கடக்கிறது.!

ஆயினும
உடன்
நீர்
இருக்கும்
உணர்வினிலே
உள்ளம் நிறைகிறது


No comments:

Post a Comment