Thursday, February 18, 2016

இளம் பிராய
நினைவுகளின் அடுக்கில்
குருதி கசிய
வியாபித்திருக்கும
நீர்த் தேடல்

பொதுக் கிணறு
தெருக்குழாய்
ஆற்றங்கரைகளில்
பதிந்த
வெற்றுக்கால்களின்
தடங்கள்
விளம்பிடும்
வேதனைக்கதைகள்

அரிசியை
பருப்பைத் தாண்டியும
அம்மாக்களின்
முழு முதற் கவலை
அன்றன்றுக்கான
தண்ணீர்

இன்றும்
அடிப்பமபை
அடித்தடித்து
காய்த்துப போன
கரங்களில்
காயந்துக் கிடக்கிறது
அவர்களின
தண்ணீருக்கான
கண்ணீர்!
# உலக தண்ணீர் தினம்


No comments:

Post a Comment