Saturday, January 3, 2015

சீக்குப் பிடித்த சேவல்
காற்தடமென 
வளைந்த வரிகளும் 
நெளிந்த எழுத்தும் 
பால்யத்தில் ..

“ முத்துக் கோர்த்தது
போல எழுது ”
முட்டி மடிக்க
விழுந்த அடிகளில்
வளைந்த விரல்கள்
நடனமிட, நடனமிட
நளின அழகில்
மிளிர்ந்து ஒளிரும்
இளமை எழிலெனவே

வயதின் முதிர்வு நெருக்கிட
தளர்ந்து
கலைந்து
தனித்துவம் தொலைத்து
வாழ்க்கைக் களைப்பில்
இன்று
கம்பீரம்
களைந்ததென்
கையெழுத்து.

No comments:

Post a Comment