Saturday, January 3, 2015



வீதியில்
ஓங்கி ஒலிக்கும் குரல்
'உப்பு உப்பேய "

ஒரு முறம்..!
இருவது பைசா நாணயம்..!

அம்மா
கையில் திணித்து
வாசலுக்குத் துரத்துகிறாள.

குவிய குவிய அளந்து
முறத்தில் போட்டபின்னும்
அள்ளிப் போடுகிறார்
மேலும் ஒரு கைப் பிடி
"கொசுறென"
.
நினைவில்
மிச்சமிருக்கும்
பளபள படிகமென
வெண்ணிற உப்பும் ..
அது தோற்கும்
அவர் புன்னகையும் .

தாரள மயமான
தாயகத்தில்
ஒருநாள்
காணமல் போனார் ..
எங்களூர் "உப்புக்காரர் "

No comments:

Post a Comment