Saturday, January 3, 2015

கப்பலில் பயணிக்கும்
யோகம் வாய்க்கினும்
அலை நடுவே
தெப்பத்தில் ஏறி
தடுமாறி வீழ்தல் 
......வாழ்வென்பது..

கரிய முதலைகள்
கால் பற்றி
இழுக்கையில்
விரலிடை
நழுவும்
சிறு சிறு மீன்களுக்காய்
அழுது அரற்றுதல்
........வாழ்வென்பது.

கைக்கெட்டும்
தொலைவில்
கண் சிமிட்டும்
முத்துக்களை
புறக்கணித்து
கால் கடுக்க
சிப்பிக்கென
உழன்று வருந்துதல்
.......வாழ்வென்பது
# வாழ்வென்பது..

No comments:

Post a Comment