Sunday, January 4, 2015

மென் நுரை துப்பிய
சின்ன சின்ன  சங்கு
வெண் சிப்பிகளைப்
சேலைத் தலைப்பில்
சேகரிக்கிறேன்   
ஓதம் விரவிய
மணற் படுகையில்
ஓடும் கருநண்டு
விரல் தொடும் என
விலகி விலகி
நடக்கிறேன்.
வண்ணக்
குடை நிழலமர்ந்து
கடல்  மீன்களைக்
கணக்கெடுக்கிறேன்

மேலிருந்து  
நீலம் தோய்த்த
வான்மேகம்
உடன் தொடர

ஆழ்கடலை ரசிக்கிறேன்


பிசுக்கு வாணலியின்
அழுக்கை
அழுந்த அழுந்த
தேய்த்துக் கொண்டே ,,!

இனிய ஞாயிறு
 

No comments:

Post a Comment