Saturday, January 3, 2015

பணி நிறைந்து 
இல்லம் திரும்பும் முன்
இருள் கவிகிறது..

செல்லும் வழி எல்லாம் 
இல்லங்களின்
முகப்பில் சுடர் விட்டு
ஜொலிக்கும்
வண்ண வண்ண நட்சத்திரம்..
ஒரு ராசகுமாரனின்
வருகைக்கு
கட்டியமாக ..!

பரணில் உறங்குகிறது
என் வீட்டு
சென்ற வருட நட்சத்திரம்..!

நெகிழித் தாள் நீக்கி
தூசு துடைத்து
செப்பனிட்டு
சின்ன மின்விளக்கு
உள்ளே பொருத்தி
தொங்க விட வேண்டும் ..
இன்றேனும்..!

உள்ளம் நம்புகிறது
குழந்தை போல..

விண்மீன் இல்லாத போதும்
வழி சொல்லாத போதும்
என் இல்லம் தேடி வருவார் ..!

வர வேண்டும் ..
அந்த ராசகுமாரன் ...!

No comments:

Post a Comment