Thursday, May 8, 2014

நீ 
காடு திருத்தி 
வீடு அமைக்கையில் –
அருகிருந்து 
கல்லுடைத்தேன் ..
மண் சுமந்தேன்

நீ
கழனியில் உழும் வேளை
களைப் பறித்தேன் ..
கதிர் அறுத்தேன்..

காலப் போக்கில்
உன்னுடன்
கற்பித்தேன்
காவல் காத்தேன்
நோய் தீர்க்கும் நேரம்
தாதியானேன்.

எல்லையில்லா வானம் போல்
துறைகள் விரிந்துச் செல்ல
எங்கும் , எதிலும்
என்னைப் பொருத்திக் கொண்டேன்

மனுக்குல உயர்ச்சியை
வரையும்
எழுது கோல்கள்
பெண் பங்களிப்பை
மறைப்பதற்கில்லை
மறுப்பதற்கில்லை

உயரும் செங்கொடி
ஓங்கிப் பறக்கட்டும்
பெண்
உழைப்பின் கயிறுதனில் ..

பெண் உழைப்பைப் போற்றும்
“மே தின வாழ்த்துக்கள் “
-

No comments:

Post a Comment