Friday, May 9, 2014

மாற்றி எழுத வேண்டும்.

அலகில் சருகை சுமந்த 
குருவியாய் சமைத்த இல்லம் 

எப்போது பிரித்தாலும்
ஏதேனும் கதை சொல்லும் புத்தகம் .

அலமாரி சேலைகள் , அணிகள்

காத்து வைத்த
கண்ணாடி பாத்திரங்கள்.

உற்ற தோழியாய்
உடன் ஆடிய ஊஞ்சல் ..

என் பெயர் சொல்லும்
இன்னபிற பொருள் எல்லாம்

மாற்றி எழுத வேண்டும்.
நான்
மரிக்கும் முன் ..

எதற்கும் முன்

ஆண்டாண்டாய் காணும்
அவலங்கள் மூட்டிவிட்ட
நெஞ்சின் தணலை
நீர்த்திடா சினத்தை

மற்றும் ஒரு தலைமுறைக்கு
மாற்றி எழுத வேண்டும்.!

மாற்றம் காணாமல்
நான்
மரிக்கும் முன்.

No comments:

Post a Comment