Thursday, February 20, 2014

" யாரோ " புன்னகை உதிர்க்க 
" யாரோ " இரு கரம் குவிக்க
" யாரோ" தோள் தொட்டு நலம் கேட்க 
" யாரோ" வலிக்க வலிக்க கை குலுக்க.. 

பிரிந்த கல்லூரி நட்பா ?
பிறந்த ஊரின் உறவா ?
அலுவலக தொடர்பா ?
வாடிக்கையாளரா ?

" யாரிவர் யாரிவர் ??"

தவித்து , தடுமாறி
நினைவுக் கிடங்கின்
கருக்கல் இடுக்குகளில்
இன்னாரென அறியுமுன்
என்னைக் கடப்பார் .
அந்த "யாரோ "

அதே நிகழ்வில் ..
"அடடா இவரா ? " என
ஒருவரை
இனம் கண்டு
இரு கை கூப்ப
எத்தனிக்கையில்

"யாரோ" என
என்னை எண்ணி
"இவர் " நகரும் தருணம்

பூக்கத் துவங்கிய
புன்னகை
உறைந்து விடுகிறது
என் உதடுகளில் ..!

-மரியா சிவா .
28-12-2013

No comments:

Post a Comment