Thursday, February 20, 2014

காலை பயணம் துவக்க 
கதிரவன் அருகிருந்துக் 
கையசைப்பேன் ...

முகில்கள் உரசுகையில்
இடியொலி கேட்டு
ரசித்திருப்பேன்..

பின்னெழும் மின்னொளியை
சுட்டு விரலால்
தொடச் செல்வேன்.

சின்னஞ் சிறு மீன்களின்
சிமிட்டல் கண்டு
மெய்சிலிர்ப்பேன்.

இன்னபிற ஏக்கமெலாம்
ஈடேற ..

உடல் மறந்து பறவையாகி
உயரே .. உயரே
செல்கிறேன்

எல்லையிலா பெருவெளியில்
சிறகசைத்து..
சிறகசைத்து ..!
" இனிய காலை வணக்கம் "
- மரியா


No comments:

Post a Comment