Thursday, November 28, 2013

மெல்ல சைக்கிளை 
மிதிக்கும் பெரியவர் – அப்பா 
கையிடுக்கில் தோல்பை – மாமா 
இன் பண்ணிய சட்டை- கோபி மாமா
எப்போதாவது தென்படும் பிரிமியர் பத்மினி- செல்வன்
ஓங்கி ஒலிக்கும் சிரிப்பு – அம்சா அத்தை

ஏதேனும், யாரேனும்
நினைவுக்குள் நகர்த்தி விட
மரித்தவர் மனதில்
உதித்து விடுகிறார்.

வெற்றிலை ,
கோழிக்குழம்பு,
கறை தின்ற காகிதத்தில் கையெழுத்து..
கட்டி வைத்த முல்லை
சிக்கலான மாக்கோலம் ..
சுவாமி புத்தகம் ...

எப்படியும், நினைவில்
மறுபடி பிறக்க வைக்கும்..
மரித்துப் போன உறவுகளை ..!

சிலிர்க்க வைக்கும்
பழம் பாடல் போலே-
மரியா சிவா ( 4-11-2013)

No comments:

Post a Comment