Thursday, November 28, 2013

உதடு பிரியா புன்னகை 
உடைந்தாலும் , சரிந்தாலும் 
ஊமை அழுகை ..!

“ யார் , என்ன நினைப்பார் ?”
எப்போதும் மனம் குடையும் ஐயம் ..!

இப்போது
மனம் விட்டு சிரிப்பு
வாய் விட்டு அழுகை ..!

நெகிழ்தலும் ,
மகிழ்தலும்
விரிந்து வளையும்
புதிய மனம்..

உயரே உயரே
பறந்துச் செல்லும்
புதிய நான் .!
# முகநூல் உபயம் ..!

No comments:

Post a Comment