Thursday, November 28, 2013

தீபாவளி 2013

உள்ளுணர்வில் மத்தாப்பு 
உயரம் தாவும் 
ஏவுகணை.. ஏற்றங்கள் ..

வண்ணப் பூச்சொரியும் 
வாணங்கள்...நினைவுகள் ..
தரை சுழலும் சக்கரமாய்
விரைகிற கால ஓட்டம்

கணப் பொழுதில்
எழும்பி மறையும்
சிறு நாக கவலைகள் ..

மனம் விட்டு “வெடிச்” சிரிப்பு ..!
தினம்தானே தீபாவளி ??

எளிமையாகவேனும் புதுச் சேலை
ஈரத்துணி பொதிந்த மல்லிகை
இனிப்பெனில் அதிரசம் ...!
இருகரை தொடும் நதியாய்
எல்லையில்லா ஆனந்தம்
இப்படிதான் ...எப்போதும்..!


தலை

தீபாவளி ..!
மகள் ..மருமகன் ,ரியா வந்திட ..
நிறைந்து விட்டது வீடு..

உறவுகள் சேர்ந்து
ஒன்றாய் மகிழ்வதை
கடவுள்கள் காணட்டும்..

முகம் பார்த்துப் பேசுகிறாள் ரியா
விரல் பிடித்து வருவாள் அடுத்த ஆண்டு..!

ஆனந்தம் பொங்கும்
தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..!

No comments:

Post a Comment