Wednesday, August 28, 2013



மெல்ல வதனம் சுருங்கும் .
மேகப் பஞ்சின் நிறம் மாறும்

விழிகளின் அடியில்
அழையாமல் வரும் கருவளையம் !

குரல் நடுங்க .. நடை குறையும்

முகம் நினவிருக்க
பெயர் மட்டும் மறக்கும்...!

நடுவரி நினைவிருக்க
பாடலின்
முதல்வரி மறக்கும்..!!

அருகே வந்து
முதுமை
கதவைத் திறக்கும்...

பணமோ பாதணியோ
எடுத்திட இயலாது ....

வெற்று கரங்களுடனே
விரைய வேண்டும்.. .
அடுத்த ஊருக்கு ...
# கண்ணாடி சொல்லும் கதை

No comments:

Post a Comment