Sunday, July 21, 2013

உறைந்த கணங்கள்..

அற்புதங்களின் கருவூலம்
அன்பும், மகிழ்வும் ததும்பும் 
அழகிய தருணங்கள்....
சுமக்கும் புகைப்படங்கள் 

உறைந்த கணங்கள்
உயிர் பெறுகையில்
கவிதையாய் மனதில் நிறையும்..
கதைகள் நூறு சொல்லும் ..

நினைவைக் கலைக்கும்,
விழிகளில் நீர் சுரக்கும்.

வளர்ந்தபின் மறந்த
மழலைச் சிரிப்பை
மறுபடி திருப்பித் தரும்.

உறவின் மேன்மையை
உரத்துச் சொல்லும் !

ஒரு ஆயிரம் இருக்குமா ?
இருக்கலாம்..

எங்கள்
வாழ்வின் பயணத்தினை
படங்களாய் பதிவு செய்து
பத்திரப் படுத்தயுள்ளோம்
மக்களின் மக்களும் ரசிக்க..!

No comments:

Post a Comment