Sunday, June 16, 2013

நேரம் நேரம்.!!

சிற்றலைகள்
சற்றே சிதைத்துச் செல்லும்

சடுதியில்
பேரலை ஒன்று
அழித்துச் கொள்ளும்.

அலை ஓய
கரையோரம்
காத்துக் கிடந்து

அற்புதமாய்
நான் குனிந்து எடுக்கையில்
நழுவிக் கொண்டு கடலில் விழும்...

இப்படித் தான்
இங்குமங்குமாய்
இறைந்தே இருக்கிறது
எனக்கே எனக்கான நேரம்.!

No comments:

Post a Comment