Sunday, June 16, 2013

மகிழ்வில் ..

தங்கை வீட்டில் சின்ன விழா.

எங்கள் வீடு
உறவினர்களால் நிறைந்துள்ளது.
வீடு மட்டுமா
என் மனமும்.!

அடிக்கடி நிகழும் சந்திப்புகள்
என்றும போல் இனிமையாய் ..
திகட்ட திகட்ட மகிழ்வாய்..

வீடு சிரிக்கிறது
வீடு அதிர்கிறது..
வீடு நலம் விசாரிக்கிறது..
வீடு கட்டிக் கொள்கிறது..
வீடு ஈரம் கசிய புனனகைக்கிறது.

வீடு குழந்தைகளின் மழலை ரசிக்கிறது.!
விளையாடுகையில்
வீடு கவனத்தோடு பின் தொடர்கிறது..

அன்பையும் , பாசத்தையும்
அளவின்றி பரிமாறுகிறது.
கண் படப் போகிறதென்று
கவலைப் படுகிறது..

என் வீடு குலுங்குகிறது..
புலன்கள் புலப்படுத்தா
கீதத்தால்
என் வீடு நிறைகிறது.
 —

No comments:

Post a Comment