Sunday, June 16, 2013

அழகிய தருணங்கள்..!

சற்று தாமதமான பதிவு..
**********************
மகள் திருமண வரவேற்பின் போது புத்தகம் நினைவாக
தரலாம் என்று முடிவு செய்தது என் வீடு.

என் கவிதைகளையே தொகுத்து தரலாம் என்றதும்
அது கை தட்டி வரவேற்றது..
திருமண பட்ஜெட்டில் முதல் செலவாய்
"அம்மாவின் கவிதைத் தொகுப்பு" செலவு எழுதப்பட்டது.!

அதன்பின் ஒரு கூட்டு முயற்சியாய் பிறந்தது இத்தொகுப்பு.
கவிதைகளை தேர்ந்தெடுத்து, கணினியில் அடித்து ,ப்ரிண்ட் எடுத்து
எல்லாமே கணவரும், மகளும் பார்க்க , நான் வழக்கம் போல் ஜாலியாய் இருந்தேன். " அழகிய தருணங்கள்" இப்படி பிறந்தது.

இறுதிவரை ஆயிரம் திருமண வேலைகளுக்கிடை இதை கொணர்ந்தார் இவர். ! வரவேற்பில் எங்கள் GM வெளியிட்டார்.

இந்த 6 மாத காலத்தில் இந்த புத்தகத்திற்கு கிடைத்த வரவேற்பு...
மிக மிக எளிமையான் கவிதைகள் தாம். ஆனால் கொடுத்த தருணம் லயிக்க வைத்தது.

அலுவலகத்தில், வெளியில், திருமணம் போன்ற விசேடங்களில், உறவினர் மத்தியில் . ஆலயம் சென்று திரும்புகையில் ,யாரேனும் என் கவிதையை பற்றி சொல்வார் . மிகுந்த நெகிழ்ச்சியாய் இருக்கும். WORKSHOP, OFFICIAL MEETING போது கூட இது நிகழும். தொலைபேசி அழைப்புகள் கணக்கில் தரவில்லை

என் ஓய்வு பெற்ற மாமா 4 பக்கத்திற்கு கவிதைகளை கவிதையால் பாராட்டி இருந்தார்.

முன்னுரையில் சொன்னது போல ...
" கல்வியும், குண நலன்களும் தாய் வீட்டுப் பெருமையாய்
எடுத்துச் செல்லும் மகளுக்கு இந்த கவிதைகளும் சீதனம்."

எனக்கோ, இங்கு வந்து வாழ்ந்ததெற்கென "ஒரு அடையாளம். "
 —

No comments:

Post a Comment