Sunday, June 16, 2013

ஊருக்குச் சென்ற கணவர்.

அடுப்பில் வழிந்தோடிய பால்..
அவனில் தீய்ந்துப் போன ரொட்டி..!
அவசர மறதியில் 
அணைக்க மறந்த மின்பெட்டி
பொசுக்கிய ஆடை ..!!
ஒலிக்கும் வாயிற்மணிக்கு
ஓடிக் களைத்த கால்கள்...
சாவி தெரியா சங்கடங்கள்.!

சின்னக் நினைவுறுத்தலும்
செல்லக் கோபங்களுமின்றி
வெறுமையாய் கழிந்த காலை!!
# ஊருக்குச் சென்ற கணவர்.

No comments:

Post a Comment