Sunday, June 16, 2013

தாள்கள் .

கவிதை முதல் கணினி வரை!
கற்றல் தொடர்கிறது.
கற்றுக் கொள்ளா
கலையும் உண்டு ..காலம் நகர்கிறது.!
செலவழிக்கும் வித்தை !

சிறுதொகை தாண்டி
கைப்பையில் இருப்பதில்லை.
பயணங்களில்
“ எதற்கும் இருக்கட்டும்”என்றே

வற்புறுத்தும் பணத்தை
வாங்கிக் கொள்வேன்
வங்கியின் புதுத் தாளாய்..
பின் செலவழிப்பதுண்டு சிறுபிள்ளையாய்..

புத்தகமாய் , வார இதழாய் ..
குழந்தைகளுக்கு சாக்லேட் !
ஓட்டல் பரிமாறுவோருக்கு..
கார் நிறுத்த காவலாளிக்கு ..

யார் கேட்டாலும் .
மனமுவந்து ..மகிழ்வாய் !
புதிய தாள்கள்.

வயது முதிர்ந்த ஏழ்மை
ஒன்று ரயிலடியில் கை நீட்ட
புதிய பணம் நீட்டினேன்.
உற்றுப் பார்த்து சொன்னார்...
“ எங்கம்மா தந்தது...செலவழிக்காமல்
அம்மா நினைவாய் வைத்துக் கொள்வேன்.”

சற்றே சிலிர்த்தேன்.!
செலவழியாமல் அப்பணம் இருந்தால்...
அவர் நினைவில் நானிருப்பேன்
“ அம்மாவாய்” கொஞ்ச காலம்.!

No comments:

Post a Comment