Monday, March 25, 2013

இந்த நாள் இனிய நாள் 

சிலு சிலு காலையில் சுகமான நடை கணவருடன் .
பாதி ,பேச்சு மீதி சிந்தனை !!
பிடித்தப் பாடல்கள் பின்னணியில் சமையல். 

அழுத்தமில்லா நாளாய் அமைந்தது விட்டது இன்று.!!

தகிக்கும் வெயிலில்
ஆய்வு முடித்து அலுவலகம்
திரும்புகையில்
அலைபேசி அழைக்க "இவர்"

"சாப்டாச்சா? "
"இன்னும் இல்லை .
வெளியே சென்று திரும்புகிறேன் " நான்
" சீக்கிரம் , இன்னிக்கு சாப்பாடு சூப்பர் "

அலுவலகம் வந்து சாப்பிட்டு பார்த்தேன்.
வழக்கம் போல சுமார்தான்.!!!!!

ஆண்டாண்டாய் தொடரும்
அழகான பொய்களால் ஆன வாழ்க்கை ...

இந்த நாள் இனிய நாள்...!!!!

No comments:

Post a Comment